சென்னை மெரினாவில் நிகழ்ந்த 'தைப் புரட்சி' குறித்தும், அதில் செய்யப்பட செலவுகள் குறித்தும் அரசியல்வாதிகளில் ஒருவர் விமர்சனம் செய்ததற்கு தோழர் செந்தமிழனால் வழங்கப்பட்ட பதில் பதிவு (சாபம்)
எத்தனை இலட்சம் மக்கள் இருந்தாலும் அவர்களில் ஒருவர்கூட பசியால் வாடக் கூடாது என்ற அறச் சிந்தனை தமிழர்களுக்கு உண்டு. ’ஒரு சாப்பாட்டுக்கு என்ன விலை? அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?’ என்று கேட்கும் கெடுமதி இந்துத்துவ புள்ளிகளுக்கு உண்டு. நாம் என்னதான் விளக்கம் கூறினாலும் அவர்களுக்குப் புரியாது.
ஒரு கையால் போராடிக்கொண்டு மறுகையால் எம் பசி தீர்த்த பெண்மை வாழும் இனம் இது.
அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி எனக் கொண்டு வந்து குவித்த எம் மக்கள், சளைக்காமல் சமையல் கட்டில் நின்று எமக்கு உணவு படைத்த எம் உறவுகள், மறுத்தாலும் கேளாமல் கையிலுள்ள பணத்தை எம் சட்டைப் பைக்குள் திணித்த அன்பர்கள், முழக்கம் எழுப்புவோரைத் தேடிச் சென்று பழச்சாறும் இளநீரும் பருகத் தந்த பிள்ளைகள், குப்பை பொறுக்கிய பண்பாளர்கள், குழந்தையின் அழுகுரலைக்கூட கேட்காமல் கோரிக்கைப் பதாகைகளை உயர்த்திக்கொண்டிருந்த அன்னையர், பால்வேறுபாடின்றி பழகிய தோழமை நெஞ்சத்தோர், சமய வேறுபாடு பாராமல் அரவணைத்த இறை மாந்தர் - அனைவரின் மனசாட்சியின் பிரதிநிதியாகச் சொல்கிறேன்,
‘எமது பசியையும் உணவையும் கூட இழிவு செய்யும் நீவிர் அனைவரும் எம் இறையின் ஐந்தாம் தொழிலுக்கு ஆட்பட்டு நாசமாவீர்’!
நந்தி மீது கை வைத்தீர்கள் - பலன் பார்த்தீர்கள். இப்போது எம்
வயிற்றிலும் உங்கள் வாயை வைத்திருக்கிறீர்கள். வயிற்றில் எரிவது அன்னையின்
தீ. அது எம் தமிழ் மறையில் உள்ள பாடம். உங்களுக்குப் புரியாது.
No comments:
Post a Comment