தடுப்பூசி பாதிப்புகளுக்கென நீதிமன்றம் அமைத்துவிட்டு வாருங்கள்!
ம.செந்தமிழன்
’தடுப்பூசிகளால்
பக்கவிளைவுகள் இருப்பது உண்மைதான். ஆனால், அது மிக மிகக் குறைவான
அளவில்தான் இருக்கும்’ என்ற கருத்தினை இப்போது அலோபதி மருத்துவர்கள் முன்
வைக்கிறார்கள். ’அந்த மிக மிகக் குறைந்த அளவு ஆட்டிசம் குழந்தையாக என்
குழந்தை இருந்துவிட்டால் என்ன செய்வது?’ என்று நினைத்துப்
பார்ப்பவர்களுக்காக மட்டும் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. மற்றவர்கள்
இதைப் பொருட்படுத்தத் தேவையில்லை.
ஏனெனில், ’மிக மிகக் குறைவான அளவு’ என்ற அந்த வாசகம் தனக்குள் பல பெரும் பொய்களை மறைத்துக்கொண்டுள்ளது.
தடுப்பூசிகளைப்
பற்றி கேள்வி எழுப்பும் உரிமை இந்த நாட்டில் உள்ளது. பொறுப்பாக பதில்
சொல்ல வேண்டிய கடமை, அரசுக்கு உள்ளது. பொத்தாம் பொதுவாக, ‘தடுப்பூசிகளுக்கு
எதிராகப் பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்’ என மிரட்ட முடியாது.
இத்தனை
ஆண்டுகாலமாக தடுப்பூசிகளைப் பற்றி இந்தச் சமூகம் கேள்வியே எழுப்பவில்லையே.
குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவோரெல்லாம் தெய்வங்கள் என்றுதானே
எல்லோரும் நம்பிக்கொண்டிருந்தனர்? இப்போது முதல்முறையாக அதைப் பற்றிக்
கேள்வி எழும்போது, உணர்ச்சிவசப்படாமல் பதில் சொல்ல வேண்டும்.
ஆனால்,
அவர்கள் பதட்டமடைகிறார்கள். ‘உங்களை எல்லாம் கைது செய்ய வேண்டும்’
என்கிறார்கள். யார் யாரைக் கைது செய்வதென்ற நியாயம், சட்டம் ஆகியனவெல்லாம்
அவர்கள் அறியாதவை.
அலோபதி
மருத்துவம் மக்களிடையே நம்பிக்கை இழந்துவிட்டது. எந்த மருந்தும் இல்லாமல்
மிக நன்றாக வாழ்ந்துகொண்டிருக்கும் பெரும் கூட்டம் உருவாகிவிட்டது. இதில்
இவர்களுக்கு என்ன பிரச்சினை? இந்திய அரசமைப்புச் சட்டமோ, மருத்துவச்
சட்டங்களோ, ‘எல்லோரும் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும்’ என்று
கூறுகின்றனவா என்ன? இல்லையே.
மருந்து
நிறுவனங்களும், மருத்துவத் தொழிலதிபர்களும் எம் மக்களை மருத்துவத்தை
நோக்கி இழுப்பதைப் பார்க்கிறோம். மருந்து வேண்டாம் எனக் கூறும் உரிமை
ஒவ்வோர் உயிருக்கும் உண்டு.
தடுப்பூசிகளால்
பாதிப்படைந்தோர், இறந்துபோனோருக்கென தனி நீதிமன்ற அமைப்பு அமெரிக்காவில்
இயங்குகிறது. தடுப்பூசிச் சேதத்திற்கான தேசிய இழப்பீட்டுத் திட்டம் (The
National Vaccine Injury Compensation Program) என்று அதற்குப் பெயர். 1986
ஆம் ஆண்டு முதல் இவ்வமைப்பு இயங்குகிறது.
தடுப்பூசிகளால்
உறுப்புச் செயலிழப்பு, மரணம், இயங்கவே இயலாத வகையிலான முடக்கம் ஆகியவை
அமெரிக்காவில் அதிகரித்ததைடுத்து, அந்த அரசு இந்த வழக்குகளுக்காகவே தனிச்
சட்ட அமைப்பை உருவாக்கியுள்ளது. மிக முக்கியமாக, ஆட்டிசம் எனப்படும் மன
இறுக்கம் குழந்தைகளைப் பாதிப்பதற்குத் தடுப்பூசிகளும் முக்கியக் காரணம்
என்பதை அமெரிக்க அரசும் ஒப்புக்கொண்டுள்ளது.
தடுப்பூசிகளின்
வருகைக்குப் பின்னர்தான் குழந்தை நோய்கள் அதிகரித்தன. அவற்றிலும் மன
இறுக்கத்திற்கும் தடுப்பூசிகளுக்கும் உள்ள உறவு மிக முக்கியமானது.
அமெரிக்க தடுப்பூசி இழப்பீட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் இறுதிப் பத்தி, இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘மார்ச்
1, 2010 ஆம் ஆண்டு நிலைப்படி, தடுப்பூசிகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக
மொத்தம் 13,330 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில், 5,617 வழக்குகள்
ஆட்டிசம் தொடர்பானவை. இவற்றில் 7,397 வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
அவற்றில், 2,409 வழக்குகளில் மனுதாரர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது’
இந்த
வழக்குகள் யாவும் ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக நடந்தவை. ’தடுப்பூசிகளால்தான்
என் பிள்ளைக்கு ஆட்டிசம் வந்தது. என் பிள்ளையின் உறுப்புகள் செயலிழந்தன,
என் குழந்தை இறந்தே விட்டது’ என்றெல்லாம் வாதாட வேண்டுமானால் அதற்கான சட்ட
விதிகள் மிக அதிகம். ஆண்டுக் கணக்கில் இவ்வழக்குகள் நடக்கின்றன.
இவ்வளவுக்குப் பின்னர் வெளியான தீர்ப்புகளின் விவரம் இது.
இந்தியாவில்
இவ்வாறான சட்ட அமைப்பே இல்லை. தடுப்பூசிகளால் தீய விளைவுகள் உருவாகும்
என்ற சிந்தனை கூட பெரும்பான்மை மக்களுக்குக் கிடையாது.
மன இறுக்கம் (ஆட்டிசம்) என்ற கொடுமையான நோய் இந்தியாவில் எந்தளவுக்குப் பெருகிக்கொண்டுள்ளது என்பதைப் பாருங்கள்.
மன இறுக்கம் (ஆட்டிசம்) என்ற கொடுமையான நோய் இந்தியாவில் எந்தளவுக்குப் பெருகிக்கொண்டுள்ளது என்பதைப் பாருங்கள்.
’2012
ஆம் ஆண்டு இந்தியாவில் 1 கோடி குழந்தைகள் மன இறுக்கத்தில்
பாதிக்கப்பட்டிருந்தனர் என்கிறது நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு
மையங்கள் (centres for disease control and prevention) எனும் அமெரிக்க
நிறுவனம். ‘இந்தியக் குழந்தைகளில் 88 பேரில் ஒருவருக்கு ஆட்டிசம் பாதிப்பு
உள்ளது’ என்றும் அவ்வமைப்பு கூறுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 110
குழந்தைகளில் ஒருவருக்கு இருந்தது. இப்போது ஆட்டிசம் விகிதம்
உயர்ந்துள்ளது’ என்கிறது அதன் அறிக்கை.
எங்கு
பார்த்தாலும் மன இறுக்கம் மிகுந்த பிள்ளைகளை நாம் பார்க்கிறோமே!
அவர்களுக்கெனச் சிறப்புப் பள்ளிக் கூடங்கள் வந்துவிட்டன, மருத்துவமனைகள்
பெருகிவிட்டன. அவர்களை மையமாக வைத்து இயங்கும் தொண்டு நிறுவனங்கள், மருந்து
நிறுவனங்கள் பல்கிப் பெருகிக்கொண்டுள்ளன. இவ்வளவுக்குப் பிறகும்
தடுப்பூசிகளைப் பற்றி நாம் கேள்விகூட கேட்கக் கூடாதென்றால், மக்களெல்லோரும்
அலோபதி மருத்துவத்தின் அடிமைகளா என்ன?
இந்த
MMR தடுப்பூசியை ஜப்பான் அரசு ஏற்கெனவே தடை செய்துவிட்டது. இதே
தடுப்பூசியைப் பற்றி பிரிட்டனில் கடும் வாக்குவாதங்கள் நிகழ்ந்துள்ளன. MMR
தடுப்பூசிகளுக்கும் மன இறுக்கம் (ஆட்டிசம்) மற்றும் வேறுபல நோய்களுக்குமான
உறவைப் பற்றி பிரிட்டன் மக்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்தத் தடுப்பூசி
வந்த பின்னர் தம் பிள்ளைகளுக்கு ஆட்டிசம் அதிகரித்ததாக அங்கும் எதிர்ப்புக்
குரல்கள் எழுந்தன. அலோபதி மருத்துவரான ஆண்ட்ரூ வேக்ஃபீல்ட் (Dr. Andrew
Wakefield) 1998 ஆம் ஆண்டு, ‘mmr தடுப்பூசிக்கும் மன இறுக்கம் நோய்க்குமான
உறவைப் பற்றிய அறிக்கைகளை வெளியிட்டார். இந்த அறிக்கைகளை அவர் பணியாற்றிய
ராயல் மருத்துவப் பல்கலைக் கழகம் ஒப்புக்கொள்ளவில்லை. அந்தப் பல்கலைக்
கழகத்திலிருந்தே வெளியேறினார் அவர்.
மேற்படித்
தடுப்பூசிக்கும் மன இறுக்கம் நோய்க்குமான சான்றுகளைப் பல மருத்துவர்கள்
முன் வைத்தனர். அவர்களுக்குப் பதில் அளித்த பிரிட்டன் மருத்துவ அறிவியல்
தலைவர் பீட்டர் லாக்மென் என்ன கூறினார் தெரியுமா?
‘தடுப்பூசி
கொடுப்பதால் எவ்வளவு கேவலமான (nasty) விளைவுகள் ஏற்படுகின்றன என்று
நீங்கள் கூறினாலும், தடுப்பூசி போடாமல் விட்டால் அதைக் காட்டிலும் 100
மடங்கு அதிகமான கேவலங்கள் உருவாகும்’ என்றார். அழகான பதில்!
இதே
பதிலைத்தான் இங்கே உள்ள மருத்துவர்களும் கூறிக்கொண்டுள்ளார்கள். ஆனால்,
உண்மையை இவ்வாறான எரிச்சல் மிகுந்த வார்த்தைகளால் மறைக்க முடியாது.
நீங்கள்
புள்ளி விவரங்களைப் பார்வையிடுங்கள். குழந்தைகளுக்கான புற்றுந்நோய்,
சர்க்கரை, இதய நோய், சிறுநீர்க நோய், நுரையீரல் மற்றும் சுவாச நோய்
ஆகியனவெல்லாம் குறைந்துள்ளனவா? அதிகரிக்கின்றனவா? எனப் படியுங்கள். இவை
எல்லாமே மிக வேகமாக அதிகரிக்கின்றன என்பதுதான் உண்மைநிலை. அலோபதி
அமைப்புகளும் இவ்வாறான புள்ளி விவரங்களைத்தான் முன்வைக்கின்றன.
இந்த
அரசும் மருத்துவத் துறையும் எந்தத் தடுப்பூசியை நீட்டினாலும் நம்
பிள்ளைகளுக்குப் புகட்டிக்கொண்டுதானே இருக்கிறோம். பின்னரும் ஏன் இவ்வளவு
நோய்கள் குழந்தைகளைப் பற்றிக்கொண்டுள்ளன? எனக் கேட்பது நம் உரிமை.
தடுப்பூசிகளின் வழியாக மன இறுக்கம் வரும் என்பது கற்பனை அல்ல. அமெரிக்கா,
பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்த
உண்மையின் ஒரு துளியையாவது இந்திய மக்களிடையே இந்த அரசு
வெளிப்படுத்துகிறதா?
இந்திய
மருத்துவச் சட்டங்கள், ‘ஒரு மருந்து தரும் முன், அம்மருந்தின் விளைவுகளைப்
பற்றி எடுத்துக் கூற வேண்டும்’ என்ற விதியை வலியுறுத்துகின்றன. ஒரே ஒரே
மருத்துவர் இந்தக் கொள்கையைக் கடைபிடித்துவிட்டு ஒரு குழந்தையின் உடலைத்
தொடட்டுமே!
மேற்கண்ட
எனது எல்லாக் கருத்துகளையும் நிராகரிப்போருக்கு நான் கூறும் செய்தி
ஒன்றுதான். அமெரிக்காவைப்போல், தடுப்பூசி வழக்குகளுக்கென ஒரு நீதிமன்றத்தை
அமையுங்கள். இந்தச் சமூகத்து மக்களும் தம் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு
நீதிமன்றங்களுக்கு அலையட்டும். இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் இழப்பீடு
கிடைக்கட்டும். அல்லது வழக்கு தள்ளுபடி ஆகட்டும்.
குழந்தையின்
வாழ்க்கையே நாசமான பின்னர், இழப்பீட்டுத் தொகைக்காக நீதிமன்றத்தில்
அலையும் அமெரிக்கப் பெண்களின் வரிசையில் தமிழ்நாட்டுப் பெண்களும்
இணையட்டும். உலகமயம் அதன் அடுத்த கட்டத்தை அடையட்டும்.
மரபு மருத்துவங்கள் மீதுதானே இவர்களுக்குக் கோபம்?
‘ஆட்டிசம், குழந்தைச் சர்க்கரை, இதய நோய்கள், புற்றுநோய்கள் ஆகியவை அதிகரிப்பதற்கான காரணம் துளசி நீரும், மிளகு கசாயமும், தூதுவளைக் கீரையும்தான்’ என்று அவர்கள் அறிவித்துவிடட்டும்.
‘ஆட்டிசம், குழந்தைச் சர்க்கரை, இதய நோய்கள், புற்றுநோய்கள் ஆகியவை அதிகரிப்பதற்கான காரணம் துளசி நீரும், மிளகு கசாயமும், தூதுவளைக் கீரையும்தான்’ என்று அவர்கள் அறிவித்துவிடட்டும்.
இந்த
அரசு மக்களுக்கானது என்றால், ‘தடுப்பூசிகளின் தீய விளைவுகளையும்
கூறிவிட்டு, அதன் பின்னர்தான் குழந்தைகளுக்கு அந்த ஊசியைப் போட வேண்டும்’.
இதுதான் சட்டம்; இதுதான் நியாயம். தேவையா இல்லையா என மக்களே
முடிவெடுக்கட்டும். அதைச் செய்யாமல், ‘தடுப்பூசி நல்லது’ என்ற ஒற்றைச்
செய்தியை மட்டுமே அரசு பரப்பும் என்றால், அந்தப் பரப்பலுக்காக மக்களின்
வரிப்பணம் செலவிடப்படும் என்றால், இதை எதிர்ப்போரை அச்சுறுத்தும் என்றால்,
இது மக்களுக்கான அரசாக இருக்க முடியாது.
அமெரிக்க அரசு தடுப்பூசிகளால் பாதிக்கப்பட்டோருக்கு 2010 ஆம் ஆண்டு வரை வழங்கிய இழப்பீட்டு விவரம் இது:
1988 ஆம் ஆண்டுக்கு முந்தைய வழக்குகளில் இழப்பீடு – ரூ. 6,130 கோடி (900 மில்லியன் டாலர்)
1988 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய இழப்பீடு – ரூ.13,600 கோடி (2 பில்லியன் டாலர்)
2010 ஆம் ஆண்டு முதல் இதற்கான ஒதுக்கீட்டில் வைக்கப்பட்டுள்ள தொகை – ரூ.20,400 கோடி (3 பில்லியன் டாலர்)
1988 ஆம் ஆண்டுக்கு முந்தைய வழக்குகளில் இழப்பீடு – ரூ. 6,130 கோடி (900 மில்லியன் டாலர்)
1988 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய இழப்பீடு – ரூ.13,600 கோடி (2 பில்லியன் டாலர்)
2010 ஆம் ஆண்டு முதல் இதற்கான ஒதுக்கீட்டில் வைக்கப்பட்டுள்ள தொகை – ரூ.20,400 கோடி (3 பில்லியன் டாலர்)
இந்திய
– தமிழக அரசுகளே, எங்கள் பிள்ளைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நீங்கள்
எத்தனை ஆயிரம் கோடிகளை ஒத்துக்கியிருக்கிறீர்கள்? இந்தக் கேள்வியையாவது
கேட்கலாமா அல்லது இதுவும் தேசதுரோகமா!
பதிவு செய்த நாள் : 29/01/2017

No comments:
Post a Comment