ஏறுதழுவல்: நிரந்தரச் சட்டம் என்றால் என்ன?
ம.செந்தமிழன்
ஏறுதழுவல் நடத்தக் கூடாது என எந்தச் சட்டமும் இல்லை. ஆனால், ஏறுதழுவலின்போது காளைகளை நடத்தும் முறைகள் பற்றி சட்டங்கள் உள்ளன. தமிழர்கள் காளைகளைத் துன்புறுத்துவதாகக் குற்றம்சாட்டித்தான் உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியது இந்திய விலங்கு நலவாரியம் (awbi) மற்றும் பீட்டா கூட்டணி.
இந்திய சுற்றுச்
சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள, இந்திய விலங்கு நல வாரியம்தான் ஏறுதழுவலைக்
கண்காணித்து, புகார் மற்றும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு.
காட்டு விலங்குகள் பட்டியலில் காளை, பசு, கன்று, எருமை, எருது ஆகியவற்றையும் இணைத்தது இந்திய விலங்கு நல வாரியம். 2011 ஆம் ஆண்டு நடந்த மிக மோசமான சதிச் செயல் இது. BULLS என்ற வார்த்தையை அச்சட்டம் பயன்படுத்துகிறது. ஆனால், அந்த வார்த்தைக்கான விளக்கத்தில் காளைகளை மட்டுமல்ல, பசு, கன்று, எருமை, எருது ஆகியவையும் உள்ளடக்கம் என அச்சட்டத்தின் இணைப்பு வரையறை செய்துள்ளது.
நண்பர்களே, நமக்கு நாம்தான் தலைவர்கள், வழக்கறிஞர்கள். இந்தச் சிக்கலை நாம்தான் தெளிவாகப் புரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும்.
மேற்படி சட்டப்படி தமிழக அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். தமிழக அரசு தனது பட்டியலில் இருந்து காளைகளை நீக்கிவிட்டால், அதை இந்திய விலங்கு நல வாரியம் ஒப்புக்கொண்டு, தனது சட்டத்தைத் திருத்த வேண்டும். அவ்வாறு செய்தால், இந்தியா முழுமைக்குமான செயல்பாட்டுக்கு அது வரும். இவ்வாறான முடிவை எடுப்பதாக இதுவரை இந்திய அரசு கூறவே இல்லை. குறிப்பாக இந்திய விலங்கு நல வாரியம் வாய் திறக்கவே இல்லை.
இந்திய விலங்கு நல வாரியம், பீட்டா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நமது போராட்டங்களுக்கு எதிராகத்தான் பேசிக்க்கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக, அவர்கள் தமிழகச் சட்டத்தை மதிக்க மாட்டார்கள்.
ஓரிரு முறை ஜல்லிக்கட்டு நடத்துவதற்காகவா நாம் இவ்வளவு பாடுபடுகிறோம்?
ஜல்லிக்கட்டு நடக்கும்போது இந்திய விலங்கு நல வாரியம் தனது பிரதிநிதிகளை அனுப்பி, காணொளிப் பதிவு செய்யும். பின்னர் உச்சநீதிமன்றம் சென்று, ‘ஜல்லிக்கட்டின்போது காளைகள் சித்ரவதை செய்யப்பட்டன’ என்று வழக்கு தொடுப்பார்கள். உச்சநீதி மன்றம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கும். ஏனெனில், இந்திய விலங்கு நல வாரியத்தின் சட்டப்படி, காளைகள் காட்சிப்படுத்தல் பட்டியலில்தான் உள்ளன.
தமிழக அரசின் அவசர சட்டத்தை எடுத்துக்காட்டி வழக்காடினால், அந்த வழக்கு தனியாக நடக்கும். ஆக, மீண்டும் நாம் அனைவரும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை எதிர்பார்த்துக் கிடக்க வேண்டும்.
இந்திய அரசு நம்மை ஏமாற்றுகிறது. தமிழக அரசு அதற்குத் துணைபோய்விட்டது.
நாம் எவருக்கும் அடிமைகள் அல்ல. நாம் உறுதியாகச் சொல்வோம், ‘ஏறு தழுவல் எங்கள் உரிமை. இந்திய விலங்கு நல வாரியத்தின் பட்டியலில் இருந்து எங்கள் கால்நடைகளை நீக்கு’.
இது ஒன்றுதான் நமக்கான நிரந்தரத் தீர்வு. இந்திய விலங்கு நல வாரியத்தை நமது கால்நடைகளின் உரிமையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அவ்வமைப்பை அனுமதித்தால் நம்மால் மாடு வளர்க்கக் கூட முடியாது.
மிகவும் இக்கட்டான இந்த நிலைமையில் நமது உணர்வும், உறுதியும் எல்லாம்வல்ல இறையாற்றலால் பாதுகாக்கப்படுகின்றன. நாம் வெற்றி பெறுவோம்.
எந்தச் சூழலிலும் நமது போராட்டம் நீர்த்துபோய்விடக் கூடாது என்பதில் உறுதியுடன் இருப்போம்!
பதிவு செய்த நாள்:22/01/2017
காட்டு விலங்குகள் பட்டியலில் காளை, பசு, கன்று, எருமை, எருது ஆகியவற்றையும் இணைத்தது இந்திய விலங்கு நல வாரியம். 2011 ஆம் ஆண்டு நடந்த மிக மோசமான சதிச் செயல் இது. BULLS என்ற வார்த்தையை அச்சட்டம் பயன்படுத்துகிறது. ஆனால், அந்த வார்த்தைக்கான விளக்கத்தில் காளைகளை மட்டுமல்ல, பசு, கன்று, எருமை, எருது ஆகியவையும் உள்ளடக்கம் என அச்சட்டத்தின் இணைப்பு வரையறை செய்துள்ளது.
நண்பர்களே, நமக்கு நாம்தான் தலைவர்கள், வழக்கறிஞர்கள். இந்தச் சிக்கலை நாம்தான் தெளிவாகப் புரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும்.
மேற்படி சட்டப்படி தமிழக அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். தமிழக அரசு தனது பட்டியலில் இருந்து காளைகளை நீக்கிவிட்டால், அதை இந்திய விலங்கு நல வாரியம் ஒப்புக்கொண்டு, தனது சட்டத்தைத் திருத்த வேண்டும். அவ்வாறு செய்தால், இந்தியா முழுமைக்குமான செயல்பாட்டுக்கு அது வரும். இவ்வாறான முடிவை எடுப்பதாக இதுவரை இந்திய அரசு கூறவே இல்லை. குறிப்பாக இந்திய விலங்கு நல வாரியம் வாய் திறக்கவே இல்லை.
இந்திய விலங்கு நல வாரியம், பீட்டா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நமது போராட்டங்களுக்கு எதிராகத்தான் பேசிக்க்கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக, அவர்கள் தமிழகச் சட்டத்தை மதிக்க மாட்டார்கள்.
ஓரிரு முறை ஜல்லிக்கட்டு நடத்துவதற்காகவா நாம் இவ்வளவு பாடுபடுகிறோம்?
ஜல்லிக்கட்டு நடக்கும்போது இந்திய விலங்கு நல வாரியம் தனது பிரதிநிதிகளை அனுப்பி, காணொளிப் பதிவு செய்யும். பின்னர் உச்சநீதிமன்றம் சென்று, ‘ஜல்லிக்கட்டின்போது காளைகள் சித்ரவதை செய்யப்பட்டன’ என்று வழக்கு தொடுப்பார்கள். உச்சநீதி மன்றம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கும். ஏனெனில், இந்திய விலங்கு நல வாரியத்தின் சட்டப்படி, காளைகள் காட்சிப்படுத்தல் பட்டியலில்தான் உள்ளன.
தமிழக அரசின் அவசர சட்டத்தை எடுத்துக்காட்டி வழக்காடினால், அந்த வழக்கு தனியாக நடக்கும். ஆக, மீண்டும் நாம் அனைவரும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை எதிர்பார்த்துக் கிடக்க வேண்டும்.
இந்திய அரசு நம்மை ஏமாற்றுகிறது. தமிழக அரசு அதற்குத் துணைபோய்விட்டது.
நாம் எவருக்கும் அடிமைகள் அல்ல. நாம் உறுதியாகச் சொல்வோம், ‘ஏறு தழுவல் எங்கள் உரிமை. இந்திய விலங்கு நல வாரியத்தின் பட்டியலில் இருந்து எங்கள் கால்நடைகளை நீக்கு’.
இது ஒன்றுதான் நமக்கான நிரந்தரத் தீர்வு. இந்திய விலங்கு நல வாரியத்தை நமது கால்நடைகளின் உரிமையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அவ்வமைப்பை அனுமதித்தால் நம்மால் மாடு வளர்க்கக் கூட முடியாது.
மிகவும் இக்கட்டான இந்த நிலைமையில் நமது உணர்வும், உறுதியும் எல்லாம்வல்ல இறையாற்றலால் பாதுகாக்கப்படுகின்றன. நாம் வெற்றி பெறுவோம்.
எந்தச் சூழலிலும் நமது போராட்டம் நீர்த்துபோய்விடக் கூடாது என்பதில் உறுதியுடன் இருப்போம்!
பதிவு செய்த நாள்:22/01/2017
No comments:
Post a Comment