Tuesday, 7 February 2017

இனிப்பு: ஒரு மருத்துவ அறிக்கையைத் தேடுகிறேன்

இனிப்பு: ஒரு மருத்துவ அறிக்கையைத் தேடுகிறேன்

இந்தப் பதிவினைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம். இனிப்பு எனும் எனது
ஆவணப்படத்தில் இணைத்துக் கொள்வதற்காக ஒரு அலோபதி மருத்துவ அறிக்கையைத் தேடிக் கொண்டுள்ளேன். அவ்வாறான அறிக்கை இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை.
ஒருவேளை, உங்களால் அவ்வறிக்கையைக் கண்டறிய முடிந்தால், எனக்கு அனுப்பி வையுங்கள்.

அந்த அறிக்கை எதுவென்றால்,

”ஒரு மனிதருக்குச் சர்க்கரை நோய் இருந்த காரணத்தினால் அவர்
மரணமடைந்தார்’’ எனும் அறிக்கை.

சர்க்கரை ஓர் ஆட்கொல்லி நோய் என எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள்
செய்யப்படுகின்றன. ஆனால், அது கொலை செய்த மனிதரை என்னால் காண இயலவில்லை.
இந்த அறிக்கைக்கென சில நிபந்தனைகள் உள்ளன. அவை பின்வருமாறு:

1. அந்த மனிதருக்குச் சர்க்கரை நோய் உள்ளது என உறுதிப்படுத்தும் முதல்
இரத்தப் பரிசோதனை அறிக்கை இணைக்கப்பட வேண்டும்.

2. அந்த மனிதர் எந்தவிதமான மருந்துகளும் உட்கொள்ளாமல் இருந்திருக்க
வேண்டும். இது அவரது உறவினர்களால் உறுதி செய்யப்பட வேண்டும்.

3. அந்த மனிதர் இறந்த பின்னர், அவரது மரணம் சர்க்கரை நோயினால் மட்டுமே
ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கைகள் இணைக்கப்பட
வேண்டும்.

சர்க்கரை ஓர் ஆட்கொல்லி நோய். மருந்துகள் உட்கொள்ளாமல் இருந்தால் மட்டுமே அந்த நோய் தீவிரமடைந்து உயிரைப் பறிக்கும்’ என்ற அலோபதியின் கருத்தினைஅதே அலோபதியின் அறிக்கைகள் உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் மேற்கண்ட நிபந்தனைகளின் வழியாக நான் முன்வைக்க விரும்பும் கருத்து.

இந்த அறிக்கையை நான் தேடும்போதெல்லாம், வேறு ஒரு வகை மருத்துவ அறிக்கை எங்கு பார்த்தாலும் தென்படுகிறது. ‘அந்த மனிதருக்கு சர்க்கரை நோய் இருந்தது. அவர் அலோபதி மருந்துகள் உட்கொண்டார். பின்னர் அந்த மனிதர் இறந்துவிட்டார்’ என்னும் அறிக்கைதான் அது.

இறந்தவரைக் கொலை செய்தது சர்க்கரை நோயா அல்லது அவர் உட்கொண்ட மருந்துகளா என்ற கேள்விக்கு ‘அறிவியல்பூர்வமான’ விடையைக் காண வேண்டும் அல்லவா.

700 கோடி மனிதர்கள் வாழும் இந்தப் புவியில் எனது தேடலுக்கு உட்பட்ட அந்த
ஒரே ஒரு மருத்துவ அறிக்கை கிடைக்காமல் போவது வேதனை தருவதாக உள்ளது.
அதைக்காட்டிலும் வேதனையானது என்னவெனில், இப்படி ஓர் அறிக்கையைப் பார்க்காமலேயே சர்க்கரை நோய் வந்தால் மரணமே கதி
என மக்கள் நம்பிக் கொண்டிருப்பதுதான். ஆகவே, ’அறிவியல் பூர்வமான
ஆதாரத்தை’ எனது ஆவணப் படத்திலும், நூல்களிலும் முன் வைக்க
விரும்புகிறேன்.

அலோபதிக்கு மட்டும்தானே அறிவியல் சொந்தமானது! தனது மொத்த அறிவியல் அறிவையும் பயன்படுத்தி, எனது தேடலுக்கான அறிக்கையை அத்துறை முன் வைக்கட்டும்

- ம.செந்தமிழன்

No comments:

Post a Comment