Friday, 10 February 2017

தடுப்பூசிகளும் கொடிய நோய்களும்: மறைக்கப்படும் உண்மைகள்!

தடுப்பூசிகளும் கொடிய நோய்களும்: 

மறைக்கப்படும் உண்மைகள்!

ம.செந்தமிழன்

நண்பர்களே,
மருத்துவர்கள் மீது இந்த சமூகம் இன்னும் கொஞ்சம் மரியாதை வைத்துள்ளது. படித்தவர்கள் அந்தக் கல்விக்குரிய பண்புடனும் நடந்துகொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதும், தவிர்ப்பதும் இந்த நாட்டு குடிமக்களுக்கு உள்ள உரிமை. அந்த உரிமையைக் கேள்வி கேட்பதும், ’நீ தடுப்பூசி போட்டுத்தான் ஆக வேண்டும்’ என்று கட்டாயப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல். அதைவிட, மனித உரிமைகளுக்கு எதிரான செயல் இது.

தடுப்பூசிக்கு ஆதரவாகப் பரப்புரை செய்யும் மருத்துவர் திரு.அருண்குமார், இவ்வாறான நேரடி மனித உரிமை மற்றும் சட்ட மீறல்களில் ஈடுபடுகிறார்.
எனது முந்தைய பதிவுகளுக்குப் பதில் சொல்வதாக அவர் ஒரு பதிவை எழுதியுள்ளார்.

தடுப்பூசிகளால் தீய விளைவுகள் உள்ளனவா இல்லையா? என்ற என் கேள்விக்கு அவர் தரும் பதில்,

//‘அல்லோபதி ஓமியோபதி எல்லாம் இல்லை பாஸ். இது evidence based medicine.
ஒரு இலை தலையை நீங்கள் மருந்து என்று சொல்லவேண்டுமானால் கூட, அதன் மருத்துவ குணத்தை ஆராய்ந்து, பல பல பரிசோதனை கட்டங்களை தாண்டி, இவை இவை பயன்கள், இவை இவை பக்க விளைவுகள் என்று தெளிவாக நிரூபித்து அதை மக்களுக்கு கொடுத்தால் அது தான் நவீன மருத்துவம். ஒன்றுமே செய்யாமல், எங்கள் மருந்துக்கு பக்க விளைவுகள் ஏதும் கிடையாது என்று கூறுவது அறிவியல் இல்லை.
எங்கள் மருந்துகள் இவை இவை விளைவுகள், இவை இவை பக்க விளைவுகள் என்று சொல்லி தான் கொடுக்க படுகின்றன.
100 சதவீதம் பக்க விளைவுகள் இல்லை என்று ஊரை ஏமாற்றி, கிட்னியை சட்னி ஆக்குவது இல்லை.
ஏன் நவீன மருத்துவத்தில் பக்க விளைவுகள் என்று சிலவற்றை குறிப்பிடுகிறார்கள். மற்றவற்றில் அவை இல்லை?
சிம்பிள்.
மற்ற மருத்துவத்தில் பக்க விளைவுகள் உள்ளனவா என்று பரிசோதித்து பார்ப்பதில்லை’//

- இந்த பதிலில் இருந்து நீங்கள் என்ன புரிந்துகொள்கிறீர்கள்? தடுப்பூசிகளால் தீயவிளைவுகள் உண்டு. ஆனால், நவீன மருத்துவம் அதை ஒப்புக்கொள்கிறது. மரபு மருத்துவம் தனது, மருந்துகளின் பக்க விளைவுகளை ஒப்புக்கொள்வதில்லை. இதுதானே அவர் கூற வரும் கருத்து? இதை நேரடியாகக் கூறிவிட்டால், அவரது தடுப்பூசி பரப்புரைக்கு பாதிப்பு உருவாகிவிடும். அதனால் சுற்றி வளைத்து எழுதுகிறார்.
நமது குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசிகளைப் போட்டால் அவர்களுக்கு மன இறுக்கம் (ஆட்டிசம்) உருவாகும் ஆபத்து உண்டு என்ற அக்கறையில் நான் என் கருத்துகளை வைக்கிறேன். ஆட்டிசம் மட்டுமல்ல, உறுப்புகள் செயலிழப்பு, முற்றிலும் இயக்கம் முடங்கிப்போகும் நிலை ஆகியவையும் உருவாகும் வாய்ப்பு உண்டு. இவ்வாறான பாதிப்புகள் எல்லாம் அமெரிக்காவில் முறைப்படி ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. எந்தத் தனி நபரும் செய்த செயல்ல இது. அமெரிக்க அரசு இந்த பாதிப்புகளை ஆவணப்படுத்தியுள்ளது.
மரபு மருத்துவத்தின் மருந்துகளைப் பற்றி நான் ஒரு வார்த்தையும் இப்பதிவில் எழுதவில்லை. ஆனால், ‘இலை தழைகளுகும் பக்க விளைவு உண்டு’ எனக் கேலி செய்கிறார் திரு.அருண்குமார். இவ்வாறான கேலிகளையும் அவமானங்களையும் சுமந்துகொண்டுதான், இந்தச் சமூகத்தில் என்னைப்போன்றோர் பணி செய்கிறோம். இந்த மண்ணில், மரபுகளை முன்வைப்போருக்கெல்லாம் கிடைக்கும் பரிசுகளில் இவ்வாறான இழிசொற்களும் உண்டு.
கேட்ட கேள்விக்குப் பதில் தராமல், சுற்றி வளைத்து, ‘ஆம். தீய விளைவுகள் உண்டு. ஆனால், நாங்கள் அதை ஒப்புக்கொள்கிறோம்’ என்கிறார் மருத்துவர்.
தடுப்பூசிகளால் ஆட்டிசம் உருவாகிறது’ என்று அமெரிக்க அரசு ஒப்புக்கொண்டு, அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கென தனி நீதிமன்றமும், இழப்பீட்டு நிதியமும் அமைத்துள்ளது. இதற்கான சான்றுகளை எனது முந்தைய பதிவில் வைத்துள்ளேன்.
தடுப்பூசிகள் 99% பாதுகாப்பானவை என்றே வைத்துக்கொள்வோம். அந்த 1% என்பது சாதாரணமான பாதிப்பு என நீங்கள் நினைக்கிறீர்களா?
இப்போது ஏறத்தாழ 1 கோடியே 80 இலட்சம் குழந்தைகளுக்கு mmr தடுப்பூசி போடப்போகிறார்கள். இவர்களில் ஒரு சதவீதம் குழந்தைகள் பாதிக்கப்பட்டால், குறைந்தது 1,இலட்சத்து 80 ஆயிரம் பிள்ளைகள் நோய்வாய்ப்படுவார்கள். இது என்ன மிகச் சாதாரணமாகக் கடந்துபோகும் பாதிப்பா? கொஞ்சமாவது பொறுப்பாகச் சிந்தித்துப் பேச வேண்டாமா? ஏறத்தாழ 2 இலட்சம் பிள்ளைகள் ஆட்டிசம் நோய்க்கு ஆளானால், அவர்களது பெற்றோருக்கு பதில் சொல்லப் போவது யார்?
எனது இந்தக் கருத்து தவறென்றால், ‘நிச்சயமாக ஒருவருக்கும் இந்தத் தடுப்பூசியால் பாதிப்பு இருக்காது’ என அரசு அறிவிக்க வேண்டும். அரசாங்கம் எந்தக் காலத்திலும் அவ்வாறான உத்தரவாதத்தை அளிக்காது. ஏனெனில், தடுப்பூசிகளால் பல மோசமான தீய விளைவுகள் உருவாகின்ற என்பதை அரசு நன்கு அறிந்துள்ளது. அதனால்தான், இந்தியாவில் தடுப்பூசிகளைக் கட்டாயமாக்கவில்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் சில மருத்துவர்கள், ‘தடுப்பூசி கட்டாயம்’ என்கிறார்கள்.
திரு.அருண்குமார் இந்த அரசாங்கத்தின் பிரதிநிதியாகப் பேசுகிறாரா? அவரால் எப்படி இவ்வளவு பெரிய உத்தரவாதங்களைத் தர முடிகிறது? இங்கே அரசாங்கம் இருக்கிறதா இல்லையா? மக்களது அச்சங்களுக்கும் ஐயங்களுக்கும் அரசுதானே பதில் கூற வேண்டும். தனிப்பட்ட மருத்துவர்கள் தம் கருத்துகளை முன்வைக்கலாம். ஆனால், ‘கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்’ என்று எழுதுவதற்கு எந்தச் சட்டம் அல்லது அரசுத் துறை இவர்களுக்கு அனுமதி அளித்துள்ளது?
இந்திய சுகாதார அமைச்சகம் ஏறத்தாழ 331 மருந்துகளைத் தடை செய்தது. இந்த மருத்துவர்கள் அன்றாடம் எழுதிக்கொடுத்துக்கொண்டிருந்த எல்லா மருந்துகளும் அந்தப் பட்டியலில் இருந்தன. அப்படியானால், அந்த மருந்துகளை எல்லாம் விழுங்கி செத்துப் போனவர்களுக்கு எவர் பொறுப்பு? குறைந்தபட்ச குற்றவுணர்ச்சி இருந்தால், ஒரு மருந்தினை ‘கட்டாயம்’ என்று கூற மாட்டார்கள். ’தடுப்பூசி கட்டாயம் என்று நீங்கள் கூறுவதாக இருந்தால் அதற்கான அரசு அனுமதியைப் பெற்றுவிட்டு வாருங்கள்’ என மக்கள் அவர்களிடம் கூற வேண்டும்.
நண்பர்களே, மீண்டும் கூறுகிறேன். அவர்கள் உண்மையை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். ’தடுப்பூசிகளால் எந்தத் தீய விளைவும் இல்லை’ என்று இந்திய அரசோ, அமெரிக்கா போன்ற நவீனக் கொள்கை நாடுகளோ அறிவிக்கவே இல்லை. இங்கே உள்ள மருத்துவர்களில் சிலர் அவ்வாறான கட்டுக்கதையைப் பரப்புகிறார்கள்.
உங்களுக்கு இந்த நாட்டில் சுயமாக முடிவெடுக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமையை விட்டுக்கொடுக்காதீர்கள்.
உங்கள் குழந்தைக்குத் தடுப்பூசி வேண்டாம் என நீங்கள் நினைத்தால், அந்த முடிவைத் துணிச்சலாக பள்ளிக் கூடத்திலும் அரசு அலுவலர்களிடம் தெரிவியுங்கள். அது நமக்குள்ள உரிமை.
எந்த மருந்து தருவதாக இருந்தாலும் அதன் விளைவுகளைப் பற்றி உங்களிடம் தெரிவிப்பது மருத்துவர்களின் கடமை. அதற்கான படிவத்தில் நீங்கள் ஒப்புகைக் கையொப்பம் இட வேண்டும். தனிப்பட்ட ,முறையில் மருத்துவர்களிடம் தடுப்பூசி போடச் சென்றால், அந்தப் படிவத்தைக் கேட்டு வாங்கிப் படியுங்கள். அதன் பிறகு முடிவெடுங்கள்.
நாம் குடிமைச் சமூகத்தில் வாழ்கிறோம்; அலோபதி மருத்துவத் துறையின் அடிமைச் சமூகத்தில் அல்ல.
முக்கியமான குறிப்பு:
இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள தடுப்பூசி செய்தியைப் பாருங்கள்.

இந்த mmr தடுப்பூசியை இந்திய அரசு இன்னும், ‘தேசிய தடுப்புசித் திட்டத்தில் சேர்க்கவில்லை. தமிழகத்தில் தடுப்பூசி முகாம் முடிந்த பின்னர்தான், அவ்வாறு செய்ய இருப்பதாக அரசு அலுவலர் கூறியுள்ளார். தேசிய தடுப்பூசித் திட்டத்தில் கூட இணைக்கப்படாத ஊசிக்கு ஆதரவாக தமிழக மருத்துவர்கள் சிலர் இறங்கி வேலை செய்வது ஏன் எனச் சிந்தியுங்கள்.

பதிவு செய்த நாள்: 30/01/2017

Image may contain: text

No comments:

Post a Comment