ஆச்சாம்பட்டியில் ஏறு தழுவினோம்!
ம.செந்தமிழன்
செம்மை வனம் அமைந்துள்ள எங்கள் ஊரான ஆச்சாம்பட்டியில், இன்று (16/01/17 – தை 3) மதியம் ஏறுதழுவல் நிகழ்வுகள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மிகுந்த உற்சாகத்துடன் விழா நிகழ்ந்தது.
என் தந்தையும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவருமான பெ.மணியரசன், ஊர் வழக்கப்படி அனைவரையும் ஒன்றுகூட்டி விழாவை முன்னெடுத்தார். இது எங்கள் ஊரில் பல்லாண்டுகளாகத் தொடரும் மரபு.
சில ஆண்டுகளாக இவ்விழா தடைபட்டிருந்தது. இந்தாண்டு அந்த மரபின் தொடர்ச்சி மீட்டெடுக்கப்பட்டது.
செம்மை வனத்தின் காளையின் பங்கேற்பு ஏறுதழுவலில் சிறப்பாக இருந்தது. பலர் கூடி பிடித்தும் எம் காளை திமிறி ஓடிச் சென்றது.
நூற்றுக்கணக்கான இளைஞர்களும் பெரியவர்களும் ஏறு தழுவலில் பங்கேற்றனர். செம்மைவனத்திற்குப் பொங்கல் கொண்டாட்டங்களுக்காக வந்திருந்த நண்பர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பல்வேறு பணிகளில் அவர்கள் ஈடுபட்டனர்
பதிவு செய்த நாள்: 18/01/2017
No comments:
Post a Comment