Friday, 10 February 2017

செந்தமிழனின் வேண்டுகோள்


செந்தமிழனின் வேண்டுகோள்


நண்பர்களே,
 எனது கருத்துகளைப் பின்பற்றும் செம்மை சமூகத்தவர் சிலரைக் கொண்டு, https://www.facebook.com/Semmaivanam/ பக்கத்தை அன்றாடம் இயங்கும் மின்னிதழாக மாற்ற முடிவெடுத்துள்ளோம். இதற்கென ஆசிரியர் குழுவை அமைக்கிறோம்.


மரபு மீட்பு, இயற்கை வாழ்வியல், இயற்கை வேளாண்மை, தற்சார்புச் சமூக அமைப்பு போன்ற எமது கருத்துகளை அன்றாடம் பதிவு செய்யச் சொல்லி இருக்கிறேன். இந்த ஏற்பாட்டினால், தனிப்பட்ட முறையில் என்னுடைய பணிச் சுமை குறையும். மேலும், பலருடைய கருத்துகள் வந்து சேரும்.


இதற்கான ஆசிரியர் குழு:
ப.கலாநிதி கலாநிதி பவேஸ்வரன்
ஆனந்த் செல்லையா Anand Chelliah
பால் கிரிகோரி Paul Gregory
சந்தோஷ் நாராயணன் Santhosh Narayanan
இராஜராஜன் Rajarajan R
க.காந்திமதி Gandhimathi Senthamizhan
துர்கா லெட்சுமி துர்காலட்சுமி தினசேகரன்
யமுனா Yamunanand
நளினி Nalini Velumani
திருமுருகன் Thiru Murugan
ப.நரேஸ் Naresh Green


மேலும், செம்மை வனம் முகநூல் பக்கம் பரவலான அறிமுகத்தைப் பெறும் வரை, எனது முகநூல் பக்கத்தில் செம்மை செயல்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளை மட்டும் வெளியிடுவேன்.

உடல் நலம், சமையல், இல்லப் பராமரிப்பு, வேளாண் நுட்பங்கள் போன்ற செயல்களுக்கான பல தகவல்களைச் செம்மை சமூகத்தவர், செம்மைவனம் பக்கத்தில் பகிர்ந்துகொள்வார்கள். இணைந்திருங்கள்.

பதிவு செய்த நாள் : 0/02/2017

Image may contain: cloud, sky, tree, plant, outdoor and nature

No comments:

Post a Comment