தமிழர் அறம்: 25 படகுகள், 17 மேற்கூரைகள் சீர்செய்யப்படுகின்றன!
ம.செந்தமிழன்
நண்பர்களே,
மீனவர் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்யும் நோக்கில், ‘தமிழர் அறம் காப்போம்’ என்ற வாசகத்துடன் எழுதியிருந்தேன். பலர் இந்த அறப்பணியில் ஈடுபட முன் வந்தீர்கள்.
மீனவர் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்யும் நோக்கில், ‘தமிழர் அறம் காப்போம்’ என்ற வாசகத்துடன் எழுதியிருந்தேன். பலர் இந்த அறப்பணியில் ஈடுபட முன் வந்தீர்கள்.
நடுக்குப்பம்
பகுதியில் கடந்த மூன்று நாட்களாக, நமது குழுவினர் களப்பணியில் ஈடுபட்டனர்.
பல்வேறு பாதிப்புகள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானவையாக நாங்கள்
பின்வரும் சிக்கல்களைக் கருத்தில்கொண்டோம்.
1. மீனவர்களின் படகுகள், வலைகளை உடனடியாகச் சீர் செய்வது. அவர்களது வாழ்வாதாரத்தை மீட்பது.
2. வீடுகளின் கூரைகள், கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பழுதுபார்ப்பது.
3. மருத்துவ சிகிச்சை பெறும் நிலையில் உள்ளோருக்கு அதற்குத் தேவையான நிதியை அளிப்பது.
2. வீடுகளின் கூரைகள், கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பழுதுபார்ப்பது.
3. மருத்துவ சிகிச்சை பெறும் நிலையில் உள்ளோருக்கு அதற்குத் தேவையான நிதியை அளிப்பது.
மீனவர்கள்
அதிகமான பணச் சேமிப்பு இல்லாமல் வாழ்வதைக் கண்டோம். அதிகபட்சம் ஞாயிற்றுக்
கிழமை (2/2/17) வரைக்கும் கடலுக்குப் போகாமல் சமாளிக்கலாம். அதற்குப்
பின்னர், உணவுக்கும் கூட பணம் இருக்காது என்ற அவர்களது நிலையை நம்
குழுவினர் புரிந்துகொண்டனர். வெளி நாடுகளில் இருந்தும், ஊர்களிலிருந்தும்
உதவ முன்வந்தவர்களிடமிருந்து பணம் வந்து சேர்வதில் நடைமுறைச் சிக்கல்கள்
இருந்தன. நாங்கள் அறக்கட்டளையோ, தன்னார்வ அமைப்போ அல்ல என்பதால் பணத்தை
வங்கியில் மாற்றுவதில் குழப்பம் இருந்தது. மேலும், இப்போதுள்ள பொருளாதார
நெருக்கடியினால் வங்கியில் பணம் எடுப்பதும் குறை வாய்ப்புள்ள
செயலாகிவிட்டது.
ஒருபுறம் பலர் எம்மை அழைத்து
தமது உதவிக் கரங்களை நீட்டுகிறார்கள். மறுபுறம் எம்மால் அவற்றை முறையாக
வாங்க இயலவில்லை. எப்படியும் இன்று இரவுக்குள் படகுகளையாவது சீர் செய்து தர
வேண்டும் என்ற நிலையும் நம் குழுவினருக்கு மனதளவில் சங்கடத்தை
உருவாக்கியது.
இந்த நிலையைச் சமாளிப்பதற்காக,
தன்னார்வர்கள் சிலர், செம்மைச் சமூகத்தவர் சிலர் சேர்ந்து தமது
கையிருப்புகளைச் செலவிட்டு தேவையான அனைத்தையும் வாங்கிக் கொடுத்தார்கள்.
பங்களிப்பு செய்ய விரும்புவோரது தொகை வந்த பின்னர் அவர்களது தனிப்பட்ட
சுமையைக் குறைக்கலாம் என நினைக்கிறேன்.
பின்வரும் பொருட்கள் இன்று மீனவர்களுக்கு வழங்கப்பட்டன:
1. 25 படகுகளுக்கான பொருட்கள் : வலைகள், நங்கூரக் கயிறுகள், பாய்மரப் பதாகைகள், இதர உதிரி பாகங்கள்.
2. ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரைகள்: 17.
மேலும், துடுப்புகள், துடுப்புக் கழிகள், வேறு சில கம்புகளும் உதிரி பாகங்களும் நாளை வாங்கித்தர உள்ளோம்.
25 படகுகளில் ஏறத்தாழ 250 மீனவர்கள் தொழில் செய்வதாக அம்மக்கள் கூறினார்கள். இந்த 25 படகுகளும் முழுமையாக இயங்கும் நிலைக்குக் கொண்டு வரத் தேவையான அனைத்தையும் செய்வதென உறுதிகொண்டுள்ளோம்.
திங்கள் முதல் அம்மீனவர்கள் தம் தொழிலுக்குத் திரும்புவார்கள் என எண்ணுகிறேன்.
1. 25 படகுகளுக்கான பொருட்கள் : வலைகள், நங்கூரக் கயிறுகள், பாய்மரப் பதாகைகள், இதர உதிரி பாகங்கள்.
2. ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரைகள்: 17.
மேலும், துடுப்புகள், துடுப்புக் கழிகள், வேறு சில கம்புகளும் உதிரி பாகங்களும் நாளை வாங்கித்தர உள்ளோம்.
25 படகுகளில் ஏறத்தாழ 250 மீனவர்கள் தொழில் செய்வதாக அம்மக்கள் கூறினார்கள். இந்த 25 படகுகளும் முழுமையாக இயங்கும் நிலைக்குக் கொண்டு வரத் தேவையான அனைத்தையும் செய்வதென உறுதிகொண்டுள்ளோம்.
திங்கள் முதல் அம்மீனவர்கள் தம் தொழிலுக்குத் திரும்புவார்கள் என எண்ணுகிறேன்.
மேலும் மருத்துவச் சிகிச்சையில் உள்ள சிலருக்கு உதவித் தொகை வழங்க உள்ளோம்.
நடுக்குப்பத்தில்
உள்ள ஊர்த்தலைவர் திரு.அசோக் முன்னிலையில் பொருட்கள் வழங்கப்பட்டன.
பொருட்கள் கொள்முதல் செய்வதற்காக மீனவர்கள் சிலர் நம் குழுவினரோடு
வந்திருந்தனர்.
இப்பணி முழுமையடைந்த பின்னர்
பணியில் ஈடுபட்டவர்களை அறிவிக்கிறேன். பங்களிப்பு செய்வோர், இப்பணி
சிறப்பாக நடக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டுள்ளோர் அனைவருக்கும் நன்றி.
பதிவு செய்த நாள்: 29/01/2017







No comments:
Post a Comment